தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். தமிழில் அஜீத் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு படத்தை அடுத்து, தற்போது தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆந்திராவில் வரப்போகிற சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.
இந்த நிலையில், நேற்று காலை ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பவன் கல்யாணின் மனைவி அன்ன லெஸ்னெவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். பவன் தனது குழந்தையை கையில் வைத்தபடி எடுத்துக்கொண்ட போட்டோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.
பவன் கல்யாணுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இப்போது பிறந்துள்ள ஆண் குழந்தையோடு சேர்த்து நான்கு குழந்தைகள் உள்ளனர். பவன் கல்யாணுக்கு அன்ன லெஸ்னொ மூன்றாவது மனைவியாவார். பவன் இதற்கு முன்னர் நந்தினி, ரேணு தேசாயை மணந்து பின்னர் அவர்களை விவாகரத்து செய்துவிட்டார்.