பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேளிக்கை வரி விதிப்பு பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே திரையுலக சங்கங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டு வரி சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கக் கூடாது என அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதனால் கடந்தவாரம் முதல் புதிய படங்கள் வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தீபாவளிக்கு படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கேளிக்கை வரி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை, விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலகினர் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். கேளிக்கை வரி ரத்தாகும் வரை புதிய படங்களை வெளியிடப்போவதில்லை என்ற நிலைப்பாடு தொடரும் என்றார்.