ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
2005-ல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் சண்டக்கோழி. விஷல் நாயகனாக நடித்த இந்த படத்தில் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், கஞ்சா கருப்பு முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விஷாலுக்கு முதல் மெகா ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கிறது.
மேலும், சண்டக்கோழியை விடவும் இந்த இரண்டாம் பாகம் இன்னும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதோடு, சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக் கணக்கானோர் இறந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கசாயம் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று சண்டக்கோழி-2 படப்பிடிப்பு தளத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. நடிகர் மயில்சாமி ஏற்பாட்டின் படி இந்த கசாயம் வழங்கப்பட்டது.