ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
தெலுங்கு சினிமாவில் பிரபாஸ் நடிகராக அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. பெரும்பாலும் காதல் கதைகளாக நடித்து வந்த அவர், பாகுபலி படத்திற்காக கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் செலவு செய்தார். அதோடு, ஐந்து படங்களை இழந்திருக்கிறார். ஆனால் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் அவரை இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக்கியிருக்கிறது.
அடுத்தபடியாக இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், சாஹோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், பிரபாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய ரசிகர்கள் எனது வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். ஆனபோதும் நான் அவர்களை சந்திப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு படத்திற்காகவும் அதிகப்படியான உழைப்பை கொடுப்பதால் அவர்களை சந்திக்க இயலவில்லை. எனது 14 வருட முயற்சி, உழைப்பின் பலன்தான் பாகுபலி படம். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு படங்களுக்காகவும் கடின உழைப்பை கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பிரபாஸ்.