தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அடிதடி விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு நடிகர் சந்தானம், சென்னை, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சந்தானத்துக்கும், சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகசுந்தரம் தரப்பில் அவருக்கு ஆதரவாக பிரேம் ஆனந்த் என்ற வக்கில் பேசியிருக்கிறார். இதில் கைகலப்பு ஏற்பட சந்தானம், பிரேம் மற்றும் சண்முகசுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர்.
பிரேம் ஆன்ந்த்திற்கு மூக்கில் காயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேப்போன்று சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வக்கில் பிரேம் ஆனந்த், சென்னை வளசரவாக்கம் போலீஸில் சந்தானம் மீது புகார் கொடுத்துள்ளார். சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த், பா.ஜ.வின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. அதனால் சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சந்தானம் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தினால் நடிகர் சந்தானம் முன் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளையோ அல்லது நாளை மறுநாளோ விசாரணைக்கு வரும் என தெரிகிறது.