'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வெள்ளியன்று துல்கர் சல்மான் நடித்த சோலோ என்கிற படம் வெளியானது. நிலம் நீர், காற்று, நெருப்பு என நான்கு பின்னணியில் உருவான நான்கு குறும்படங்களை இணைத்து ஆந்தாலாஜி வகை படமாக இந்த சோலோ படம் உருவாக்கப்பட்டுள்ளது. சில உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவான இந்தப்படத்தில் இடம்பெற்ற சில குறும்படங்களுக்கான முடிவு ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்ததாக சொல்லப்பட்டது. இதனால் படம் ரிலீஸான பின்னர், இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அனுமதி இல்லாமலேயே தயாரிப்பு நிறுவனம் க்ளைமாக்சில் சில மாற்றங்களை செய்து தியேட்டர்களுக்கு அனுப்பியது.
இந்தநிலையில் இன்று இதுகுறித்து துல்கர் சல்மான், தயவு செய்து 'சோலோ'வை கொல்லாதீர்கள் என்கிற உருக்கமான வேண்டுகோளுடன் ரசிகர்களுக்கு நீண்டதொரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டவேண்டும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள், அப்படி ஏதாவது வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ளும்போது, அது பிடிக்காமல் போனால் உற்சாகப்படுத்தாவிட்டாலும், ஊக்கம் தராவிட்டாலும், அந்த முயற்சியை கொச்சைபடுத்துவதை விட்டுவிட்டு, அதை அப்படியே கடந்து செல்லலாமே.
மலையாள சினிமாவிலேயே ஒரு இயக்குனரின் அனுமதி இல்லாமல் படம் வெளியானபின், வெட்டி ஒட்டி வெளியிடுவது இதுதான் முதன்முறையாக இருக்கும். இதுவும் ஒருவகையில் படத்தை கொல்வது போலத்தான். தயவுசெய்து 'சோலோ'வை கொல்லாதீர்கள்” என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் துல்கர் சல்மான்.