Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப்பை சங்கடத்தில் மாட்டிவிட்ட 'ராம்லீலா' படத்தின் கதை

09 அக், 2017 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Dileep-upset-over-Ramleela-story

மலையாள நடிகர் திலீப் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வந்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அதை இப்போது வரை ஒரு விழா போலவே கொண்டாடி வருகிறார்கள்.. ஆனால் பலரது கண்களுக்கு இந்த விஷயம் உறுத்தலாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியான திலீப்பின் ராம்லீலா' படத்தின் சில காட்சிகளுக்கும், திலீப்பின் தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்ததை, தற்போது திலீப் எதிர்ப்பாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி, திலீப்பை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி வருகின்றனர்.

விஷயம் இதுதான்.. ராம்லீலா படத்தில், தேர்தலில் போட்டியிடுவார் திலீப். தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சியில் உள்ள மூத்த அரசியல்வாதியை கொலைசெய்துவிட்டதாக திலீப்பை போலீஸ் தேடும்.. சாட்சியங்களும் அவருக்கு எதிராகத்தான் இருக்கும். ஆனால் படத்தின் கதாநாயகி மூலமாக, திலீப் அந்த கொலையை செய்யவில்லை என்றும், திலீப் வளர்ச்சி பிடிக்காத அவரது கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் தான் இதை செய்தார் என்கிற உண்மை வெளிப்பட்டு, திலீப் நிரபராதி என நிரூபிக்கப்படுவதுடன், அந்த தேர்தலிலும் மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றியும் பெறுவார்.

நிற்க.. இந்த இடத்தில் தான் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார் இயக்குனர்.. அதாவது பலவருடங்களுக்கு முன் அரசியல்வாதியாக இருந்த தனது தந்தையை கொன்று பதவியை பிடித்த எதிர்க்கட்சி அரசியல்வாதியை பழிவாங்க சமயம் பார்த்து காத்திருபார் திலீப். தற்போது அதை சரியாக பயன்படுத்தி அவரை தானே கொன்றதோடு, அந்தப்பழியை தனது தந்தையை கொல்ல அப்போது உடந்தையாக இருந்த, தனது கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதியின்மீது திருப்பிவிட்டு, அவரை சிறைக்கு அனுப்பி வைப்பதாக படம் முடியும்..

இந்தப்படம் மட்டுமல்ல, இதற்கு முன் வெளியான 'பின்னேயும்' என்கிற படத்தில் கூட திலீப் இதேபோல ஒருவரின் இன்சூரன்ஸ் பணத்தை சுருட்டுவதற்காக, அவரைக்கொன்றுவிட்டு, அவரது மனைவியிடம் நல்லவர் போல நாடகமாடுவார் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் திலீப்பின் எதிர்ப்பாளர்கள் சிலர், திலீப்பின் உண்மையான சுபாவம் தான் படத்தில் வெளிப்படுகிறது. ராம்லீலா, படத்தில் தான் செய்த ஒரு கொலையையே அடுத்தவர் மீது சாதுர்யமாக திருப்பி, மக்களை வைத்தே தன்னை நிரபராதி என சொல்ல வைத்த திலீப்புக்கு திட்டங்கள் தீட்டுவது ஒன்னும் கஷ்டமான காரியம் இல்லையே, என நடிகையின் பாலியல் சித்தரவதை விவகாரத்தை தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர். இது திலீப் தரத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in