பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாள நடிகர் திலீப் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வந்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அதை இப்போது வரை ஒரு விழா போலவே கொண்டாடி வருகிறார்கள்.. ஆனால் பலரது கண்களுக்கு இந்த விஷயம் உறுத்தலாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியான திலீப்பின் ராம்லீலா' படத்தின் சில காட்சிகளுக்கும், திலீப்பின் தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்ததை, தற்போது திலீப் எதிர்ப்பாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி, திலீப்பை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி வருகின்றனர்.
விஷயம் இதுதான்.. ராம்லீலா படத்தில், தேர்தலில் போட்டியிடுவார் திலீப். தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சியில் உள்ள மூத்த அரசியல்வாதியை கொலைசெய்துவிட்டதாக திலீப்பை போலீஸ் தேடும்.. சாட்சியங்களும் அவருக்கு எதிராகத்தான் இருக்கும். ஆனால் படத்தின் கதாநாயகி மூலமாக, திலீப் அந்த கொலையை செய்யவில்லை என்றும், திலீப் வளர்ச்சி பிடிக்காத அவரது கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் தான் இதை செய்தார் என்கிற உண்மை வெளிப்பட்டு, திலீப் நிரபராதி என நிரூபிக்கப்படுவதுடன், அந்த தேர்தலிலும் மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றியும் பெறுவார்.
நிற்க.. இந்த இடத்தில் தான் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார் இயக்குனர்.. அதாவது பலவருடங்களுக்கு முன் அரசியல்வாதியாக இருந்த தனது தந்தையை கொன்று பதவியை பிடித்த எதிர்க்கட்சி அரசியல்வாதியை பழிவாங்க சமயம் பார்த்து காத்திருபார் திலீப். தற்போது அதை சரியாக பயன்படுத்தி அவரை தானே கொன்றதோடு, அந்தப்பழியை தனது தந்தையை கொல்ல அப்போது உடந்தையாக இருந்த, தனது கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதியின்மீது திருப்பிவிட்டு, அவரை சிறைக்கு அனுப்பி வைப்பதாக படம் முடியும்..
இந்தப்படம் மட்டுமல்ல, இதற்கு முன் வெளியான 'பின்னேயும்' என்கிற படத்தில் கூட திலீப் இதேபோல ஒருவரின் இன்சூரன்ஸ் பணத்தை சுருட்டுவதற்காக, அவரைக்கொன்றுவிட்டு, அவரது மனைவியிடம் நல்லவர் போல நாடகமாடுவார் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் திலீப்பின் எதிர்ப்பாளர்கள் சிலர், திலீப்பின் உண்மையான சுபாவம் தான் படத்தில் வெளிப்படுகிறது. ராம்லீலா, படத்தில் தான் செய்த ஒரு கொலையையே அடுத்தவர் மீது சாதுர்யமாக திருப்பி, மக்களை வைத்தே தன்னை நிரபராதி என சொல்ல வைத்த திலீப்புக்கு திட்டங்கள் தீட்டுவது ஒன்னும் கஷ்டமான காரியம் இல்லையே, என நடிகையின் பாலியல் சித்தரவதை விவகாரத்தை தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர். இது திலீப் தரத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.