தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகளைத் தவிர முன்னணி நடிகர்கள், நடிகைகள் என்று கலந்து கொண்டவர்களின் பட்டியலைப் பார்த்ததில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சூர்யாவைத் தவிர முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவேயில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஷ்ணு விஷால் என விஷாலுக்கு நெருக்கமான சில நடிகர்கள் கூட வரவில்லை. நடிகர்கள் தான் இப்படி என்றால் ஒரு முன்னணி கதாநாயகி கூட இந்த பொதுக்குழுவுக்கு வரவில்லை.
மற்ற மொழி நடிகர் சங்கங்களில் ஒரு பொதுக்குழு என்றாலோ அல்லது ஏதாவது சிறப்பு கூட்டம் என்றாலோ அனைத்து நடிகர்கள், நடிகைகள் வந்து கலந்து கொள்கிறார்கள். ஆனால், இங்கு நடக்கும் எந்த ஒரு முக்கியமான நிகழ்விலும் முக்கியமானவர்கள் தொடர்ந்து வராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
அதே சமயம், பல சீனியர் கதாநாயகி நடிகைகள் தொடர்ந்து நடிகர் சங்க நிகழ்வுகளுக்கு வருவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. அவர்களிடம் உள்ள அந்த எண்ணம் கூட இந்தக் காலத்து நடிகையரிடம் இல்லாதது ஏன் என்று தெரியவில்லை.
ஒரு பாரம்பரியம் மிக்க தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு இப்படி நடந்து முடிந்திருப்பது பற்றி சம்பந்தப்பட்டிருப்பவர்களுக்கு நிச்சயம் கவலை அளித்திருக்கும். இருந்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இப்படி ஒற்றுமை இல்லாமல் இருந்தால் திரையுலகம் இன்னும் பல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சிலர் முணுமுணுத்ததையும் நேற்று கேட்க முடிந்தது.