'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சூப்பர் ஸ்டார் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் ரூ.400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் தயாராவதோடு 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகிறது. 3டி தொழில்நுட்பம் படத்தில் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்த ஒரு மேக்கிங் வீடியோ ஒன்றை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
இந்த வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது : இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே இதை 3டியில் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் எழுதியிருக்கிறார். என்னுடைய ஓப்பனிங் சீன் 3டியில் எப்படி வருகிறது என்பதை பார்த்தேன். மெய்மறந்து போனேன். அது ஒரு பிரமாண்ட அனுபவம். இதற்காக ஷங்கரை பாராட்டுகிறேன். ஹாலிவுட்டின் 3டி படங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்த படம் அல்ல இது. மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க நானும் காத்திருக்கிறேன் என்றார்.
இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பதாவது : பார்வையாளர்களுக்கு திரைப்படத்துக்குள் பயணிக்கிற உணர்வை 3டி தொழில்நுட்பம் ஏற்படுத்தும். 3டியின் நேரடியான காட்சி அனுபவம் அற்புதமாக இருக்கும். ஹாலிவுட்டில் முதலில் 2டியில் படமாக்கிவிட்டு பிறகு போஸ்ட் புரொடக்ஷனில் 3டியாக மாற்றுவார்கள். ஆனால் இந்தப் படம் 3டிகென உள்ள நவீன கேமராவில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்ஷ்ன் காட்சிகள் நேரடி அனுபவத்தை நம் கண்ணுக்கு அருகில் கொண்டு வந்து தரும். இந்தப் படம் வெளிவந்த பிறகு நிறைய 3டி திரைப்படங்கள் வரும். தியேட்டர்கள் 3டி தொழில்நுட்பத்துக்கு மாறும் என்றார்.