'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஆந்திராவின் முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு கதையில், லட்சுமியின் என்.டி.ஆர் என்ற படம் தயாராக உள்ளது. சர்ச்சை இயக்குனர் ராம்கோபால்வர்மா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டீலை அவர் தனது இணைய பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், தனது தந்தை என்டிஆரின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதியின் பின்னணியில் இருந்து கதை நகர்த்தப்படுவதால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார் பாலகிருஷ்ணா. ஆனால், அப்படி கதை பண்ணினால் தான் வியாபார ரீதியாக வெற்றிபெற முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் ராம் கோபால் வர்மா.
அதையடுத்து இந்த விசயத்தில் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பாத பாலகிருஷ்ணா, இப்போது அந்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அதோடு, தந்தையின் படம் என்பதால் அந்த படத்தை தானே தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். அதன்காரணமாக, தனது மகன் பிராமினி, மகள் தேஜஸ்வினி ஆகியோரது பெயரில் பிரம்மா தேஜா புரொடக்சன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் பாலகிருஷ்ணா.