தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளா சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் நடிகைகள் தான் அதிகமாக இறக்குமதியாகி வந்தனர். ஆனால் சமீபகாலமாக மலையாள நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவிற்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், மம்முட்டி, மோகன்லாலைத் தொடர்ந்து பிருத்விராஜ் பல படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது துல்கர்சல்மான், பகத்பாசில், நிவின் பாலி உள்பட பல நடிகர்கள் தமிழில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில், துல்கர்சல்மான், நிவின்பாலி ஆகியார் தமிழிலும் கதாநாயகர்களாகவே நடித்தபோதும், பகத்பாசில் வேலைக்காரன் படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்துள்ளார். அதையடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். மேலும், விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தில் மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்கிறார். இவர் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர் ஆவார். மலையாளத்தில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்துள்ள இவர் படங்களும் இயக்கி தயாரித்துள்ளார்.
அதேபோல், மலையாளத்தில் கதாநாயகன் மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ள டோவினோ தாமஸ், தற்போது தனுஷ் நடிக்கும் மாரி-2வில் வில்லனாகியிருக்கிறார். ஆக, எதிர்காலத்தில் மலையாள நடிகர்கள் கோலிவுட்டில் இறக்குமதியாவது இன்னும் அதிகரிக்கும் போல் தெரிகிறது.