வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகை கவுதமி தற்போது மத்திய அரசின் உதவியுடன் தமிழகமெங்கும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார். நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து மருத்துவமுகாம் நடத்தினார். இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கவுதமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு நான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து எனது பவுண்டேசனுக்கு உதவி செய்யயும்படி கேட்டேன். அந்த உதவியின் அடிப்படையில் இப்போது நான் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன். இன்னும் பல இடங்களில் நடத்த இருக்கிறேன். என்றார்.
பின்னர் நிருபர்கள் கமலின் அரசியில் பிரவேசம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கவுதமி "சினிமா நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. அரசியலில் தலைமை பொறுப்புக்கு வருவதை தனிப்பட்ட விஷயமாக பார்க்கிறேன். அரசியலுக்கு தகுதியானவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தகுதியானவர்களுக்குத்தான் அவர்கள் ஆதரவு தருவார்கள்.
ஜெயலிதாவின் மரணத்தில் முதன் முதலில் சந்தேகம் கிளப்பியது நான்தான். இப்போது அது அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை. டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு அவசர நடவடிக்கைகள் மூலம் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் கவுதமி.