பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கமல்ஹாசன் நேற்று திரைப்படங்களை ஆணவப்படுத்துதல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. அவரிடம் அரசியல் கருத்துக்களை பெறுவதற்காக தொலைக்காட்சி நிருபர்கள் அந்த விழாவில் கூடியிருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ளவில்லை. கமலுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. உடனே மீடியாக்கள் ஆழ்வார்பேட்டையை நோக்கி படையெடுத்தன.
கமல்ஹாசனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென காய்ச்சலும், இருமலும் ஏற்பட்டது. இதனால் அவர் தனது டாக்டரை அழைத்து உடல் பரிசோதனை செய்துள்ளார். வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதை கண்டுபிடித்த டாக்டர் அதற்கான சிகிக்சை அளித்துவிட்டு இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார். இந்த தகவல் காட்டுத் தீபோல நேற்று பரவியது. கமலுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக கமல் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது "கமல் சாருக்கு காய்ச்சலும், இருமலும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது தொண்டையில் புண் உண்டாகி அவரால் பேச முடியவில்லை. அதனால்தான் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ஓய்வில் இருந்தாலும் அன்றாட அலுவலக பணிககளை கவனித்து வருகிறார்" என்றார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத அரசு பதவி விலக வேண்டும் என்று கமல் டுவிட்டரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.