ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் பிரியதர்ஷன், உதயநிதி உடனான படத்தை நிறைவு செய்ய உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் இன்னும் 36 நாட்களில் நிறைவு செய்யப்பட உள்ளது. மலையாளத்தில் வெளியான மகிஷினிதே பிரதிகாரம் படத்தின் ரீ-மேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தென்காசியிலும், சில பகுதிகள் துபாயிலும் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதி உள்ளார். பிரியதர்ஷன் இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபல டைரக்டர் மகேந்திரன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த படத்தில் டைரக்ஷ்னில் தனக்கு உதவும்படி மகேந்திரனிடம் பிரியதர்ஷன் கேட்டுள்ளார். அதனை அவர் மறுத்ததால், படத்திற்கு பெயர் வைக்கும் பொறுப்பை மகேந்திரனிடம் கொடுத்தாராம் பிரியதர்ஷன். உடனே சிறிதும் தயக்கமின்றி நிமிர் என பெயர் வைத்தாராம் மகேந்திரன். இந்த தகவலை பிரியதர்ஷனே பெருமையுடன் தனது பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.