தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஐஸ்வர்ய லட்சுமி. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் தயாராகி வரும் 'மாயநதி' படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. இந்தப்படத்தில் மலையாள சினிமாவில் வளர்ந்து இளம் ஹீரோவான டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பஹத் பாசில் நடித்து ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்கு கதை எழுதிய ஷ்யாம் புஷ்கரன் தான் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை எழுதியுள்ளார். படத்தின் கதைக்கான கருவை இயக்குனர் அமல் நீரத் கொடுத்துள்ளார்.
இந்தப்படத்திற்காக ஐஸ்வர்ய லட்சுமி சாதாரணமாக தேர்வு செய்யப்பட்டு விடவில்லை. நடிப்பு தவிர உடையலங்காரம், சிகையலங்காரம் என பலகட்ட ஆடிசன்களுக்குப் பிறகே இவர் தேர்வானார். ஆனாலும் படத்தில் நடித்த ஆரம்ப நாட்களில், இந்தப்படத்தில் தான் தேர்வானதை ஐஸ்வர்ய லட்சுமியால் நம்பவே முடியவில்லையாம். ஏதோ தெரியாமல் தன்னை தேர்வுசெய்து விட்டார்கள், திடீரென ஒருநாள் தன்னை வெளியேற்றினாலும் வெளியேற்றலாம் என்றெல்லாம் கூட நினைத்தாராம். 'துப்பறிவாளன்' நாயகி அணு இம்மானுவேல் கூட துல்கரின் படத்தில் அப்படி சில நாட்கள் நடித்தபின் விலக்கப்பட்டவர் தான். ஆனால் தனக்கு அவ்வாறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்து முழு அர்ப்பணிப்பையும் இந்தப்படத்தில் கொடுத்து நடித்துள்ளாராம் ஐஸ்வர்ய லட்சுமி.