ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கடந்த வெள்ளியன்று துல்கர் சல்மான் நடிப்பில் 'சோலோ' திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியிருந்தார். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவான இந்தப்படம், வரி பிரச்சனை தீரும்வரை தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என அறிவித்ததால் மலையாளத்தில் மட்டும் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் வேறுவிதமாக மாற்றப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இது இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அனுமதி இல்லாமலேயே மாற்றப்பட்டு இருப்பது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நான்கு குறும்படங்களை இணைத்து ஆந்தாலாஜி வகை படமாக இந்த சோலோ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நான்கு குறும்படங்களுக்குமான முடிவு ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாக இருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை கூறினார். இதனால் இயக்குனரின் அனுமதி இல்லாமலேயே தயாரிப்பு நிறுவனம் க்ளைமாக்சில் சில மாற்றங்களை செய்து தியேட்டர்களுக்கு அனுப்பியுள்ளது.
அப்படி மாற்றப்பட்ட இந்த புதிய க்ளைமாக்ஸ் முன்னதை விட பெட்டராக இருப்பதாகவும் சொலப்படுகிறது. ஆனாலும் இயக்குனரின் அனுமதி இல்லாமல் இப்படி மாற்றியது முறையல்ல என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இதுபற்றி கேள்விப்பட்ட படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியாரும், “மாற்றப்பட்ட க்ளைமாக்ஸ் எனது கவனத்துக்கு வராமல் செய்யப்பட்டுள்ளது. நல்லதோ கெட்டதோ நான் என் படத்தின் பக்கமே எப்போதும் நிற்பேன்” என கூறியுள்ளார்.