ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யா-சமந்தாவின் திருமணம் கடந்த 6-ந்தேதி கோவாவில் நடந்தது. முதல்நாள் இந்து முறைப்படி நடந்த திருமணம், 7-ந்தேதியான நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இரண்டு திருமணங்களுமே கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அந்த வகையில், முதல்நாள் வேதமந்திரங்கள் ஒலிக்க நடந்த திருமணம், மறுநாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் சூழ சிறப்பு ஜெபக்கூட்டங்கள் நடைபெற்ற பின்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
மேலும், இரண்டாவது நாளான நேற்றைய திருமணம் நடைபெற்று முடிந்ததும், தனது பெற்றோரின் வீட்டிற்கு நாகசைதன்யாவுடன் சென்றிருக்கிறார் சமந்தா. அதையடுத்து அங்கிருந்து நாகசைதன்யாவின் வீட்டிற்கு செல்ல தயாரானபோது, தனது பெற்றோரை கட்டித்தழுவி அழுதிருக்கிறார் சமந்தா. அந்த போட்டோக்கள் நேற்று மாலை முதல் இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது.