தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இந்த படத்தை அடுத்து தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். அந்த படத்தை ராம்கோபால்வர்மா இயக்குகிறார். தனது தந்தையின் கதாபாத்திரம் என்பதால் அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆர்வமாகவே இருந்தார் பாலகிருஷ்ணா.
ஆனால் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டீலை ராம்கோபால் வர்மா வெளியிட்டதில் இருந்து டென்சனில் இருக்கிறாராம் பாலகிருஷ்ணா. காரணம், அந்த கதையை என்டிஆரின் கதையாக இல்லாமல் அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை பண்ணியிருக்கிறாராம் ராம்கோபால்வர்மா.
அதன் காரணமாகத்தான் அந்த படத்திற்கு லட்சுமியின் என்டிஆர் -என்று பெயர் வைத்துள்ளாராம். இப்படி லட்சுமி பார்வதியின் கோணத்தில் கதை செல்வதால், தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு படமாக இல்லாமல் லட்சுமி பார்வதியின் வாழ்க்கை வரலாறு படமாகி விடும் என்று எரிச்சலில் இருக்கிறாராம் பாலகிருஷ்ணா.