அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் ஜெய், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டு விட்டு போதையில் காரை ஓட்டியபடி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போதை அதிகமானதால் நிலைதடுமாறி அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே இதுபோன்று ஒரு சம்பவத்தில் ஜெய் ஈடுபட்டதால் அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரது போலீஸார் பரிந்துரை செய்திருந்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 3ந் தேதி நேரில் ஆஜரான ஜெய் குற்றப்பத்திரிக்கை நகல் பெற்றுச் சென்றார். ஆனால் நேற்று முன்தினம் நடக்க இருந்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் ஜெய்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில் ஜெய்யை வருகிற 10ந் தேதிக்குள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போக்குவரத்து புலனாய்வுத்துறைக்கு கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஜெய்யை கைது செய்ய போலீசார் அடையாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய் இன்று(அக்., 7) சரண் அடைந்தார்.