சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
கடந்த 85 நாட்களாக சிறையில் இருந்த திலீப்புக்கு சமீபத்தில் அவருக்கு கிடைத்த ஜாமீன் சற்றே ஆசுவாசம் தந்திருப்பது என்னவோ உண்மை. ஆனாலும் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என சிறையில் அவர் இருந்த சமயத்தில் வெளியே மக்கள் தன் மீது எந்தவிதமான உணர்வுகளை கொண்டிருக்கிறார்களோ என சற்றே கலக்கத்துடன் தான் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் கடந்தவாரம் அவர் நடித்த ராம்லீலா படம் வெளியாகி ஹிட்டாகி விடவே, அந்த வெற்றிச்செய்தி திலீப்புக்கு மிகப்பெரிய தெம்பை கொடுத்துள்ளது.
படம் ரிலீசாகி வெற்றி பெற்றதுமே படத்தின் இயக்குனர் அருண்கோபியும், தயாரிப்பாளரும் சிறைக்கே சென்று இந்த இனிப்பான செய்தியை திலீப்பிடம் கூறியுள்ளார்கள். அங்கேயே இயக்குனரை கட்டிப்பிடித்து தனது பாராட்டை தெரிவித்தாராம் திலீப். நேற்று முன்தினம் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானதும் 'ராம்லீலா' படத்தின் இயக்குனர் அருண்கோபி திலீப்பை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். இக்கட்டான நேரத்தில் தனக்கு வெற்றிப்படம் கொடுத்துள்ள அருண்கோபியை நண்பர்கள் வட்டாரத்தில் ரொம்பவே புகழ்ந்து பாராட்டினாராம் திலீப்.