பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 85 நாட்களாக சிறையில் இருந்த திலீப்புக்கு சமீபத்தில் அவருக்கு கிடைத்த ஜாமீன் சற்றே ஆசுவாசம் தந்திருப்பது என்னவோ உண்மை. ஆனாலும் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என சிறையில் அவர் இருந்த சமயத்தில் வெளியே மக்கள் தன் மீது எந்தவிதமான உணர்வுகளை கொண்டிருக்கிறார்களோ என சற்றே கலக்கத்துடன் தான் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் கடந்தவாரம் அவர் நடித்த ராம்லீலா படம் வெளியாகி ஹிட்டாகி விடவே, அந்த வெற்றிச்செய்தி திலீப்புக்கு மிகப்பெரிய தெம்பை கொடுத்துள்ளது.
படம் ரிலீசாகி வெற்றி பெற்றதுமே படத்தின் இயக்குனர் அருண்கோபியும், தயாரிப்பாளரும் சிறைக்கே சென்று இந்த இனிப்பான செய்தியை திலீப்பிடம் கூறியுள்ளார்கள். அங்கேயே இயக்குனரை கட்டிப்பிடித்து தனது பாராட்டை தெரிவித்தாராம் திலீப். நேற்று முன்தினம் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானதும் 'ராம்லீலா' படத்தின் இயக்குனர் அருண்கோபி திலீப்பை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். இக்கட்டான நேரத்தில் தனக்கு வெற்றிப்படம் கொடுத்துள்ள அருண்கோபியை நண்பர்கள் வட்டாரத்தில் ரொம்பவே புகழ்ந்து பாராட்டினாராம் திலீப்.