Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: நடிகை சுகுமாரியின் 77வது பிறந்த நாள் இன்று : அவரைப் பற்றிய சில நினைவுகள்

06 அக், 2017 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Actress-Sukumaris-birthday-today

மலையாள மனோரமா என்று அழைக்கப்படும் சுகுமாரி தமிழ்நாட்டில் உள்ள நாகர் கோவிலில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர்.

அண்ணாதுரை எழுதிய ஓர் இரவு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தன் வாழ்நாளில் இந்திய மொழிகள் அனைத்திலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

1974ம் ஆண்டு வெளிவந்த சட்டைக்காரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். தமிழில் மனோரமாவின் சென்னை தமிழ் பிரபலமானது போன்று மலையாளத்தில் சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளம் புகழ்பெற்றது.

நடிகன் படத்தில் காதல் வரும் வயதான பெண் வேடத்தில் மனோரமா நடித்தது போன்று சுகுமாரி பூச்சாக்கொரு மூக்குத்தி என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார். கருப்பு கண்ணாடி அணிந்து நடித்த அவரது ஸ்டைலான நடிப்பு இப்போதும் ரசிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் மலையாள சினிமாக்களின் அம்மா கேரக்டர் என்றால் சுகுமாரிதான். காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது நான்கு சேலை, நான்கு துண்டு, நான்கு கைலி எடுத்துச் செல்வாராம். அதைக் கொண்டு நான்கு படத்தில் அம்மாவாக நடித்த விட்டு திரும்புவாராம்.

எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று தனக்கு சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்ளாத நடிகை. கொடுப்பதை வாங்கிக் கொள்வார். அவர் இலவசமாக நடித்துக் கொடுத்த படங்களும் ஏராளம்.

2011ம் ஆண்டு நம்ம கிராமம் படத்தில் வயதான பிராமண பெண்ணாக நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 2003ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.

தன் முதல் படத்தை இயக்கிய பீம்சிங்கின் இரண்டாவது மனைவியானர் சுகுமாரி. அவரது சொந்த வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. தன் கலையின் மூலம் அவர் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டார்.

2013ம் ஆண்டு பூஜை செய்தபோது சேலையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல நாள் போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்தார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தார் சுகுமாரி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in