டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள மனோரமா என்று அழைக்கப்படும் சுகுமாரி தமிழ்நாட்டில் உள்ள நாகர் கோவிலில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர்.
அண்ணாதுரை எழுதிய ஓர் இரவு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தன் வாழ்நாளில் இந்திய மொழிகள் அனைத்திலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
1974ம் ஆண்டு வெளிவந்த சட்டைக்காரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். தமிழில் மனோரமாவின் சென்னை தமிழ் பிரபலமானது போன்று மலையாளத்தில் சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளம் புகழ்பெற்றது.
நடிகன் படத்தில் காதல் வரும் வயதான பெண் வேடத்தில் மனோரமா நடித்தது போன்று சுகுமாரி பூச்சாக்கொரு மூக்குத்தி என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார். கருப்பு கண்ணாடி அணிந்து நடித்த அவரது ஸ்டைலான நடிப்பு இப்போதும் ரசிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் மலையாள சினிமாக்களின் அம்மா கேரக்டர் என்றால் சுகுமாரிதான். காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது நான்கு சேலை, நான்கு துண்டு, நான்கு கைலி எடுத்துச் செல்வாராம். அதைக் கொண்டு நான்கு படத்தில் அம்மாவாக நடித்த விட்டு திரும்புவாராம்.
எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று தனக்கு சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்ளாத நடிகை. கொடுப்பதை வாங்கிக் கொள்வார். அவர் இலவசமாக நடித்துக் கொடுத்த படங்களும் ஏராளம்.
2011ம் ஆண்டு நம்ம கிராமம் படத்தில் வயதான பிராமண பெண்ணாக நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 2003ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
தன் முதல் படத்தை இயக்கிய பீம்சிங்கின் இரண்டாவது மனைவியானர் சுகுமாரி. அவரது சொந்த வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. தன் கலையின் மூலம் அவர் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டார்.
2013ம் ஆண்டு பூஜை செய்தபோது சேலையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல நாள் போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்தார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தார் சுகுமாரி.