'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டியபடி வீடு திரும்பினார். அப்போது நிதானம் இழந்து அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இது ஜெய்க்கு இரண்டாவது போதை சம்பவம் என்பதால் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் சிபாரிசு செய்துள்ளனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4வது கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 3ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டில் நேரில் ஆஜரான ஜெய் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுச் சென்றார். அப்போது மீண்டும் வழக்கு விசாரணை 5ந் தேதி (நேற்று) விசாரிக்கப்படும் அப்போது ஜெய் ஆஜராகி தன் சார்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.
அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் ஜெய் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜெய்க்கு பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெய் இன்றும்(அக்., 6) ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டு நாளில் ஜெய்யை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை அக்., 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கோர்ட்டின் இந்த உத்தரவால் ஜெய், இன்றோ, நாளையோ கைது செய்யப்படலாம் என தெரிகிறது.