மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நடிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பாக, நடிகர்கள், ராதாரவி, சரத்குமார் உட்பட, நான்கு பேர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வடக்கு மண்டல, ஐ.ஜி.,யிடம், நடிகர் சங்க பொதுச் செயலர், விஷால் புகார் அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சங்கத்திற்கு சொந்தமான, 26 சென்ட் நிலம், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே, வேங்கடமங்கலம் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை, சங்க பொதுக்குழு, செயற்குழு ஒப்புதல் பெறாமல் விற்றனர். இதையடுத்து, முன்னாள் சங்க தலைவர், சரத்குமார், பொதுச் செயலர், ராதாரவி, பொருளாளர், கே.என்.காளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நடேசன், செல்வராஜ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், காளை இறந்து விட்டார். மற்ற நான்கு பேருக்கும், இருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, நடிகர் சங்கத்தில் விசாரணை நடந்தது; அப்போது, ராதாரவி அளித்த பதில், திருப்தி அளிக்கவில்லை. செல்வராஜ் அளித்த பதிலில், இறந்து போன காளையிடம் தான் கேட்க வேண்டும் என, கூறியுள்ளார். சரத்குமார், எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், நில விற்பனையால், சங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வடக்கு மண்டல, ஐ.ஜி.,யிடம், விஷால் புகார் அளித்துள்ளார் என, சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.