தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கைதி எண் 150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகும் இந்த படமும் பாகுபலி படத்தைப்போன்று மூன்று மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிறது. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். சுரேந்தர் ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார்.
சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால் இப்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்ன வேலு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவர், சிரஞ்சீவியின் கைதி எண் 150 படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் ரத்ன வேலு, அந்த படத்தை முடித்ததும் சிரஞ்சீவி படத்துக்கு வருகிறாராம்.