பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கைதி எண் 150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகும் இந்த படமும் பாகுபலி படத்தைப்போன்று மூன்று மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிறது. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். சுரேந்தர் ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார்.
சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால் இப்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்ன வேலு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவர், சிரஞ்சீவியின் கைதி எண் 150 படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் ரத்ன வேலு, அந்த படத்தை முடித்ததும் சிரஞ்சீவி படத்துக்கு வருகிறாராம்.