பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
இயக்குனர் சுந்தர்.சி மீது துணை நடிகர் மற்றும் இயக்குனரான வேல்முருகன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் கடந்த 27 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். 4 படங்களுக்கு கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளேன். 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் இணை செயலாளராக பணியாற்றி இருக்கிறேன். நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி எனக்கு நெருங்கிய நண்பர். அவரது பல படங்களில் நடித்திருக்கிறேன். துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். கதை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும்.
தற்போது தொலைக்காட்சி ஒன்றில் நந்தினி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொடரின் கதையை நான் தான் எழுதினேன். தனது நிறுவனத்தின் மூலம் அதனை சுந்தர்.சி தயாரித்து ஒளிப்பரப்புகிறார். நந்தினி கதையை என்னிடம் பெற்றுக் கொண்ட சுந்தர்.சி அதற்காக ரூ.50 லட்சம் தருவதாக கூறினார். ஆனால் ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதி 46 லட்த்தை தர மறுக்கிறார்.
அதனைக் கேட்டால் அடியாட்களை அனுப்பி என்னை மிரட்டுகிறார். அவர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சுந்தர்.சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.