அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
நடிகர் ஜெய் கடந்த மாதம் 21ந் தேதி ஒரு மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்து அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஜெய் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்றுக் கொண்டார். வழக்கு விசாரணை நாளை (5ந் தேதி) தொடர்ந்து நடக்கிறது. ஜெய் கோர்ட்டுக்கு வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு முன்பே வந்துவிட்ட ஜெய் காரில் அமர்ந்திருந்தார்.
பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் இல்லை என்பதை அவரது வழக்கறிஞர் மூலம் உறுதி செய்து கொண்ட பிறகே காரை விட்டு இறங்கி கோர்ட்டுக்கு சென்றார். குற்றப் பத்திரிகை நகலை பெற்றதும் வேகமாக காரில் ஏறி சென்று விட்டார். அவருடன் அவரது நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.