ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழக அரசு திரைப்படத்துறைக்கு 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்திருப்பதால் தமிழ் சினிமா உலகில் குழப்பமும், கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டுள்ளது. அமைப்புகளுக்கிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லாத காரணத்தால் தனித்தனியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
வருகிற 6ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடப்போவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், "திபாவளி பண்டிகை வரை தியேட்டர்களை மூடும் உத்தேசம் எதுவும் இல்லை. வரிவிதிப்பு குறித்து எல்லா சங்கங்களும் கலந்து பேசி முடிவெடுக்கும்" என்று கூறியிருக்கிறார்.
நேற்று நடந்த சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் "கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தியேட்டரை மூடுவோம்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று நடந்த மதுரை, ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் கேளிக்கை வரிவிதிப்பை கண்டித்து வருகிற 18ந் தேதி முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அவர்களது அகில இந்திய சங்கத்தின் முடிவின்படி நேற்றே மூடிவிட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் தனது பொதுக்குழுவை வருகிற 8-ந் தேதி கூட்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு அமைப்பும் தன்னிச்சையான முடிவுகளை அறிவித்திருப்பது திரைத்துறையில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பின் கூட்டமும், தமிழ் திரைப்பட வர்த்தக சபை கூட்டும் ஒருங்கிணைப்பு கூட்டமும் இன்று நடக்கிறது.