டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகள் தற்போது 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி கட்டி வருகிறது. தற்போது மாநில அரசு 10 சதவிகித கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனால் திரைப்படத் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் வருகிற 6-ந் தேதி முதல் புதிய படங்களின் வெளியீட்டை நிறுத்தி வைப்பது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ் திரைப்படத்துறை ஏற்கெனவே திருட்டு விசிடி முதல் சமீபத்தில் விதிக்கப்பட்ட 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு வரை பல்வேறு காரணங்களால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு 10 சதவிகித கேளிக்கை விரி விதித்துள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதனை அரசு ஏற்கவில்லை.
இந்த பிரச்னை தொடர்பாக சங்கத்தின் அவசரக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி, கேளிக்கை வரியை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் வருகிற 6ந் தேதி முதல் புதிய படங்களின் வெளியீட்டை நிறுத்தி வைப்பது என்றும் முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.