'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு. இவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் குறள் 388. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தெலுங்கில் ஓட்டர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் சுரபி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சம்பத்ராஜ், போசாளி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், பிரமானந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கடைசி பென்ஞ் கார்த்திக், காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரிக்கும் ராமா ரீல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஜான் சுதீர்குமார் தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.எஸ்.கார்த்தி இயக்குகிறார். படம் பற்றி மஞ்சு விஷ்ணு கூறியதாவது:
உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவும் இல்லை "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்ற 388-வது குறளின் கருத்துக்கள் தான் படத்தின் கதைக் கரு. அதாவது மக்களை முறையாக பராமரித்து காக்கின்ற மன்னன். அந்த மக்களுக்கு இறைவனைப் போன்றவன் என்பது அந்த குறளின் கருத்து.
பரபரப்பான இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக படம் உருவாகிறது. இந்த படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும். இதில் காதல், மோதல் காமெடி எல்லாம் இருக்கும் விஜய தசமி அன்று எனது பிரவேசத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்றார்.