தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாக்லேட் பாய் மாதிரி இருந்த இவரா இப்படி'... என்று, ஆச்சர்யப்படும் அளவுக்கு, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்... ஹீரோ பாதி, வில்லன் பாதி கலந்து செய்த கலவையாக நடிப்பில் கலக்கும் நடிகர் பிரசன்னா மதுரையில் மனம் திறந்த நிமிடங்கள்...
* உங்கள் பார்வையில் இயக்குனர் மிஷ்கின்...
மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தில் நடித்த பின் பெரிய இடைவெளி. 'நந்தலாலா' படத்தில் மிஷ்கின் நடிக்க முடிவு செய்த போது 'நீங்கள் ஒரு இயக்குனர், நீங்கள் ஏன் நடிக்கிறீங்க'ன்னு அவரிடம் வாக்குவாதம் செய்தேன். நடிக்க ஆரம்பித்த நல்ல இயக்குனர்கள் பலர் காணாமல் போய் விட்டனர். அந்த அக்கறையில் நான் அதிக உரிமை எடுத்து சொன்னது கடைசியில் சண்டையில் முடிந்தது. அதற்கு பின் ஏழு ஆண்டுகள் மிஷ்கினிடம் பேசவில்லை.
* மீண்டும் மிஷ்கின் உடன் எப்படி...
எனக்கு ஒரு 'ரீ என்ட்ரி' தேவைப்பட்டது, அப்போது மிஷ்கினை சென்று பார்த்தேன். 'ஏன் இத்தனை நாள் வரலை; என்ன உனக்கு கோபம்' என்று கேட்டார். 'அஞ்சாதே 2' பண்ணலாம் என்று யோசித்த போது 'விஷாலுடன் 'துப்பறிவாளன்' படம் பண்றேன். அதில் நீயும் நடிக்குறே'ன்னு சொல்லி எனக்காக ஒரு 'செகண்ட் ஹீரோ' கேரக்டர் எழுதிவிட்டார்.
* உங்கள் நடிப்பில் அடுத்த ரிலீஸ்...
என்னை அறிமுகம் செய்த இயக்குனர் சுசி கணேசனின் 'திருட்டு பயலே 2'. பாபி சிம்ஹா, அமலா பால் கூட்டணியில் நான் வில்லனாக நடிக்குறேன். 'அஞ்சாதே'க்கு பின் ஒரு 'ஸ்ட்ராங்'கான வில்லன் ரோல் கிடைத்துள்ளது. அடுத்தது எழுத்தாளர் குட்டி ரேவதி இயக்கும் 'ஜெயமுண்டு பயமில்லை' படத்தில் போலீஸ் ஆபீசரா நடிக்கிறேன். தெலுங்கில் சிரஞ்சீவி உறவினர் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறேன்.
* ஹீரோ, செகண்ட் ஹீரோ, இப்போ வில்லன்...
செகண்ட் ஹீரோ கேரக்டர் எனக்கும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனால், 'துப்பறிவாளன்' படத்தில் என் கேரக்டரை பார்த்து நிறைய பேர் பாராட்டினார்கள். 'படத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்கும் முக்கியமான நபரே நீங்கள் தான்' என, ரசிகர்கள் புகழ்கிறார்கள். அடுத்த படத்தில் வில்லன் கேரக்டருக்காக என்னை நானே மாற்றி நடிப்பது பெரிய சவாலாக நினைக்கிறேன்.
* 'பாடி பில்டர்' மாதிரி இருக்கீங்களே...
இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் நடிக்காமல், அதிக நேரம் ஒதுக்கி 'ஜிம்' சென்று உடம்பை இப்படி மாற்றி இருக்கிறேன். இதற்கான ரிசல்ட் 'திருட்டு பயலே 2'வில் தெரியும்.
* உங்கள் வீட்டு ஹீரோயின் சினேகா...
'நீங்கள் சரியான பாதையில் தான் போறீங்க, 'துப்பறிவாளன்' படத்தில் உங்கள் கேரக்டர் நல்லாவே வந்திருக்கு, நல்ல பெயர் கிடைக்கும்'னு சொன்னாங்க. 'ஹீரோவா தான் நடிப்பேன்னு சொல்லாதீங்க; எல்லாவிதமான கேரக்டரும் நடிங்கன்னு' சொல்வாங்க. சினேகாவுக்கு 'அஞ்சாதே' படம் ரொம்ப பிடிக்கும்.
* சினிமா கற்றுக் கொடுத்த பக்குவம்...
முதலில் சினிமா கனவு மட்டும் தான் இருந்தது, சினிமாவில் கிடைத்த வெற்றி, தோல்வி,
அவமானம், பாராட்டு எல்லாம் என்னை நிறைய பக்குவப்படுத்தி இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் எந்த படமும் நடிக்காமல் திரும்பவும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை தான் என்னை மீண்டும் நடிக்க வைத்துள்ளது. 'உங்களுக்கு எந்த அளவு சினிமா முக்கியமோ அதே அளவு சினிமாவுக்கு நீங்களும் முக்கியம்' என்று சினேகா அடிக்கடி சொல்வார். எனக்கும், சினேகாவுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள், அதனால சினிமாவில் இன்னும் சாதிப்போம்...
pras2882@gmail.com