ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனை வைத்து ரஜினி முருகன் படத்தை இயக்கியபோது பொன்ராம் ஏறக்குறைய ரத்தக்கண்ணீர் சிந்தினார். அப்படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் அப்போது பணக்கஷ்டத்தில் இருந்ததால் படப்பிடிப்பு செலவுக்கு பணம் அனுப்பாமல் கால தாமதம் செய்தது.
மதுரையில் ரஜினி முருகன் படப்பிடிப்பு நடைபெற்றபோது தயாரிப்பாளர் பணம் ஏற்பாடு செய்யாமல் விட்டபோதெல்லாம் பொன்ராம் அவமானப்பட்டார். ஒரு கட்டத்தில் ரஜினி முருகன் படத்தை ட்ராப் பண்ணும் சூழல் கூட உருவானது. ஏறக்குறைய இதே மாதிரியான பணப்பிரச்சனை தற்போது அவர் இயக்கி வரும் படப்பிடிப்பிலும் தொடர்கிறதாம்.
சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் படத்தை தற்போது பொன்ராம் இயக்கி வருகிறார். வேலைக்காரன் படம் ரிலீஸ் ஆகி கல்லாப்பெட்டி நிறைந்திருக்கும் என்ற எண்ணத்தில் பொன்ராம் இயக்கும் படத்தை துவங்கினர். ஆனால் வேலைக்காரன் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அது மட்டுமல்ல வேலைக்காரன் படத்தின் ரிலீஸுக்கே சுமார் 30 கோடி பணம் தேவைப்படுமாம்.
இந்த பணத்தைப் புரட்டவே முடியாத சூழலில் இன்னொரு பக்கம் பொன்ராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கையில் பணம் இல்லாததினால் படத்தில் பணிபுரியும் முன்னணி டெக்னீஷியன்களுக்கே சம்பளம் கொடுக்கவில்லையாம். அதோடு லைட்மேன்களுக்கு பேட்டா கூட கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக தகவல்.