கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மகளிர் மட்டும் படத்தைத் தொடர்ந்து ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள அறம் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து, தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ஆண் தேவதை படமும், ஜிப்ரான் தயாரித்துள்ள சென்னை டு சிங்கப்பூர் படமும் வெளியாக உள்ளன.
தற்போது அறம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறம் தீபாவளிக்கு வெளியாவதை அடுத்து அப்படத்தின் பின்னணி இசை தற்போது முடிவடைந்துள்ளது. அறம் படம் பற்றி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளார் ஜிப்ரான்.
அறம் படத்தின் கடைசி கட்ட ஒலிக் கலவை பணிகளை முடித்தோம். இந்த அற்புதமான படத்தில் பங்காற்ற வைத்த இறைவனுக்கு மிகவும் நன்றி. வளர்ச்சியடையாத இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து வந்தவனாக, இன்னும் அந்தப் பகுதியில் வேரூன்றியிருப்பவனாக என்னால் இந்தப் படத்தோட என்னை நிறைய சம்பந்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. மக்கள் கேட்க வேண்டிய பிரச்சினையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. படம் பெரிய திரையில் வந்ததும் அதன் நோக்கம் நிறைவேறும் என நம்புகிறேன்.”
அதோடு, அறம் படத்துக்கு உயிரூட்டிய நயன்தாரா படத்தின் இயக்குநர் கோபி, தயாரிப்பாளர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், எடிட்டர் ரூபன், சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஆகியோருக்கு நன்றி தெரித்துள்ளார்.