தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்டோர் கலந்த கொண்டனர்.
விழாவில் பேசிய ரஜினி, ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி என்பத மீண்டும் நிரூபணமாகி உள்ளது. காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பாக்கியம் ஓபிஎஸ்.,க்கு கிடைத்துள்ளது. சிவாஜி, நடிப்பு சக்கரவர்த்தி. நடிப்பில் புரட்சியை உண்டாக்கி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களாலும், இவரை போன்று யாராலும் நடிக்க முடியாது என அங்கீகரிக்கப்பட்டவர், சிவாஜி.
அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்து இருந்தால் கண்டிப்பாக சிலையும், மணிமண்டபமும் அமைத்திருக்க முடியாது. அவர் படைத்த, விதைத்த, சாதித்த கதாபாத்திரங்கள், கடைக்கோடி மக்கள் வரை நடிப்பை கொண்டு சேர்த்தது தான் அவருக்கு மணிமண்டபம் அமைக்கக் காரணம். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போதிலும் ஆன்மீகம் சார்ந்த படங்களில் நடித்து, வெற்றி கண்டவர். செத்த பிறகு மண்ணாகிறவர்களுடன் பழக முடியும். சாம்பலாகிறவர்களுடனும் பழக முடியும். ஆனால் செத்த பிறகு சிலையாகிறவர்களுடன் பழகுவது அபூர்வம். பெருமையான விஷயம்.
அரசியல் - சினிமா இணைந்த விழா இது. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, அரசியல் பாடத்தையும் சொல்லிக் கொடுத்தவர். அவர் தனிக்கட்சி துவக்கி, தனது சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போனவர். அது அவருக்கு கிடைத்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த அவமானம். அரசியலில் வெற்றி பெற சினிமா பேரும், செல்வாக்கும் மட்டும் போதாது.
அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் எனக்கு தெரியாது. அது கமலுக்கு தெரியும். என்னுடன் வா சொல்லித் தருகிறேன் என்கிறார். ஒருவேளை 2 மாதங்களுக்கு முன் கமலிடம் கேட்டிருந்தால் அந்த ரகசியத்தை சொல்லி இருப்பார். சிவாஜிக்கு மணிமண்டபம் அமைத்த ஜெயலலிதா, அவருக்கு சிலை அமைத்த கருணாநிதி ஆகியோருக்கு நன்றி. இவ்வாறு ரஜினி பேசி உள்ளார்.