இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மாநில, தேசிய, ஆசிய எல்லைகளை கடந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஒருவேளை நான் நடிக்க வராமல் இருந்திருந்தால், என்னை உள்ளே அனுமதிக்கா விட்டாலும் வெளியில் ஒரு ரசிகனாக இருந்து இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பேன். எப்படியும், யார் தடுத்தாலும் இந்த மணிமண்டப திறப்பு விழாவிற்கு நான் வந்திருப்பேன்.
நடிப்பை கற்றுக்கொடுத்து என்னை போன்ற பலரின் வாழ்க்கையை மேம்படுத்திய கலைஞனுக்கு நன்றி செலுத்தும் விழா இது. யாரையும் கட்டாயப்படுத்தியோ, கெஞ்சியோ சிவாஜியை மதிக்க வைக்க முடியாது. எத்தனை முதல்வர்கள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தே ஆக வேண்டும். கோடான கோடி ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கக் கூடிய கலைஞர் சிவாஜி.
நடிக்க முயற்சிப்பவர்களுக்கும், முயற்சித்து தோற்றவர்களுக்கும் அவரே முன்னோடி. அத்தகைய கலைஞனுக்கு மணிமண்டபம் அமைத்து, விழா எடுத்த அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.