விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார் வடிவேலு. ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து கத்திச்சண்டையில் நடித்தபோது தண்ணியில கண்டம் படத்தை இயக்கிய சக்திவேல் இயக்கத்தில் நீயும் நானும் நடுவுல பேயும் என்ற படத்தில் ஆர்.கேவுடன் இணைந்து நடிக்கயிருந்தார்.
ஆனால், தான் நாயகனாக நடித்த முந்தைய இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால், அந்த படத்தில நடிக்க கொஞ்சம் தயங்கி வந்தார் வடிவேலு. அதோடு, ஏற்கனவே தன்னை வைத்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவனும் தயாராகிக் கொண்டிருந்ததால், அந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்த வடிவேலு, அந்த படத்திற்கு பிறகு நீயும் நானும் நடுவுல பேயும் படத்தை தொடங்கலாம் என்று கூறி விட்டாராம். அதனால், புலிகேசி-2 படப்பிடிப்பு முடிந்த கையோடு ஆர்கேவுடன் அவரை இணைத்து நீயும் நானும் நடுவுல பேயும் படத்தை இயக்கப்போகிறாராம் சக்திவேல்.