டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியாவை சுத்தமான, ஆரோக்யமான பூமியாக மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா பிரபலங்களில் ஆதரவினை நாடினார் பிரதமர் மோடி. அதையடுத்து அக்டோபர் 2-ந்தேதி இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறயிருக்கும் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கலந்து கொள்ள சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார் மோடி.
ஹிந்தி சினிமா நடிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய நடிகர்கள் பலருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். மலையாளத்தில் மம்மூட்டியைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபு, பிரபாசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இவர்களில் பிரபாஸ், தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குபெற தனக்கு வாய்ப்பளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கடிதம் எழுதியிருப்பவர், தூய்மை இந்தியா திட்டத்துக்கு எனது முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறாராம். அதோடு, தூய்மை இந்தியா திட்டம் சம்பந்தமாக தனது ரசிகர் மன்றங்களையும் களமிறக்குகிறாராம் பிரபாஸ்.