பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
வெப்பம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நானி. அதையடுத்து நான் ஈ படத்தில் நடித்து பிரபலமான அவர், பின்னர் தமிழ், தெலுங்கில் உருவான ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நீ தானே என் பொன் வசந்தம், நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர், தற்போது பல்லாண்டு வாழ்க என்ற படத்திலும் நட்புக்காக நடிக்கிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் நானி. தற்போது எம்.சி.ஏ, கிருஷ்ணாஜூனா யுத்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் எம்சிஏ டிசம்பரில் திரைக்கு வருகிறதாம். அதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கிருஷ்ணாஜூனா யுத்தம் வெளியாகிறதாம். இதில் எம்சிஏ படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார்.
தெலுங்கில் சாய்பல்லவி நாயகியாக நடித்த பிடா படம் அவரை பிரபலப்படுத்தியிருப்பதை அடுத்து, நானியின் எம்சிஏ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாயகி வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். எப்போதுமே நானியின் படங்களில் அவரைச்சுற்றியே கதை இருக்கும். என்றாலும், சாய் பல்லவியின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்கு தனது படத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் நானி. அந்த வகையில், பிடா படத்தை அடுத்து எம்சிஏ, கரு ஆகிய படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி.