இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் பிரேமம்'. இந்தப்படம் அதில் ஹீரோவாக நடித்த நிவின் பாலியின் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தியதுடன், அந்தப்படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளான சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூவர் மீதும் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது. இதில் சாய் பல்லவிக்கு கொஞ்சம் அதிகப்படியான புகழ் கிடைத்தாலும் மற்ற இருவருக்கும் ஓரளவு பட வாய்ப்புகள் கிடைத்தன.
இதில் அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷின் கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.. அதேபோல இன்னொரு நாயகியான மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியுடன் இரண்டு படங்களில் நடித்தவர், தனுஷ் இயக்கத்தில் உருவான பவர் பாண்டி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இப்போது சாய்பல்லவியும் தனுஷுடன் 'மாரி-2' படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். ஆக, பிரேமம் நாயகிகள் மூவருடனும் பிரேமிக்க வாய்ப்பு கிடைத்த ஒரே நடிகர் என்கிற பெருமை தனுஷுக்கு கிடைத்துள்ளது.