பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பிகே., தங்கல் என அமீர்கானின் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றன. அதிலும் கடந்தாண்டு வெளியான தங்கல் படம் சுமார் ரூ.1700 கோடிக்கு மேல் வசூலித்தது. சீனாவில் மட்டும் ஆயிரம் கோடி வசூலித்தால் பாகுபலி-2 சாதனையை முறியடித்தது.
அமீர்கான், தற்போது அமிதாப் பச்சன் உடன் இணைந்து "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தின் புரொமோஷனுக்காக வதோரா சென்ற அமீர்கான், அங்கு பத்திரிகையாளர்களின் தனது கனவுப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அமீர்கான் கூறியதாவது... என்னுடைய கனவுப்படம் மகாபாரதம். ஆனால் இப்படத்தை ஆரம்பிக்க எனுக்குள் சிறிய அளவிலான பயம் உள்ளது. இப்படத்தை நான் எடுக்க குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகளாவது ஆகும். மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன். ஆனால் அந்த ரோலில் நான் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை, ஏனென்றால் என் உடல்வாகு அதற்கு செட்டாகாது. நான் கிருஷ்ணன் வேடத்தில் வேண்டுமானால் நடிக்கலாம். எனக்கு அர்ஜூனனின் கேரக்டரும் பிடிக்கும். அர்ஜூனன் மட்டும் தான் கிருஷ்ணனிடம், "என் மக்களை ஏன் கொல்ல வைத்தாய்" என்று கேள்வி கேட்பார் என்று கூறியிருக்கிறார்.
அமீர்கான் தயாரித்துள்ள சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் வருகிற அக்., 19-ம் தேதி தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது.