மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக அரசின் சார்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான அக்., 1ம் தேதி திறந்து வைக்கப்படும் என்றும், அன்று காலை 10.30 மணிக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் திறந்து வைப்பார்கள் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இது சிவாஜி ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வேதனை அளித்துள்ளது. மேலும் திரையுலகினர் உள்ளவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமாவின் மாபெரும் கலைஞனின் விழாவில் முதல்வர் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் நேரில் சென்று திறந்து வைத்திருப்பார் என்றெல்லாம் குரல்கள் எழுந்தன. அதுமட்டுமல்ல, இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து வந்த எதிர்ப்பால், சிவாஜி மணிமண்டப விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார், அவர் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சி காரணமாக முதல்வர் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.