Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி மணிமண்டப விழாவில் முதல்வர் பங்கேற்க நடிகர் சங்கம் வேண்டுகோள்

29 செப், 2017 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sanga-request-CM-to-participate-in-Sivaji-function

அரசு சார்பில் நடிகர் சிவாஜிக்கு மணி மண்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சிவாஜி பிறந்த தினமான அக்., 1-ம் தேதி நடக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இந்த விழா நடக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சிவாஜியின் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தார் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதோடு திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் விடுத்துள்ள வேண்டுகோளில் மணி மண்டம் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

சிவாஜி கணேசன் வெறும் நடிகர் மட்டுமல்ல... தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். இன்றளவும் அவருடைய தாக்கமில்லாத நடிகர்கள் அரிது.... அழகு தமிழினை அனைவர்க்கும் கொண்டு போய் சேர்த்த கலாச்சாரக் குறியீடு... நடிப்புக் கலைக்கவர் இலக்கணம் வகுத்தவர்.

கலைக்காக அவர் தம் பணியினை அடையாளம் கண்டு பிரஞ்சு அரசாங்கம் தன் உயரிய விருதான “செவாலியே”வை கௌரவித்தது. உலகம் போற்றும் அக்கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போது, மிகச் சிறப்பான விழாவாக அமைய வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கனவு. அந்தக் கனவு முழுமையாக நனவாவது, முதலமைச்சர் அவர்களே திறந்து வைப்பதேயாகும். அதுவே அக்கலைச் சிகரத்திற்கு சரியான, தகுதியான மரியாதையாகும்.

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்காலத்தில் அவர் தனக்கு இணையாக போற்றிய சிவாஜிக்கும் சரியான மரியாதை கிடைக்க வேண்டுமென்பதே வேண்டுதல். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தன் மனதிற்கு நெருக்கமான விஷயமாக, சிவாஜிக்கு மணிமண்டபம் எழுப்புவது, அதை கோலாகலமான விழாவாக்குவது என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார். அவர் இருந்திருந்தால் திறந்து வைத்திருப்பார். இச்சூழலில் முதலமைச்சர் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரியது.

இதுவே ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் உணர்வும், குரலும், எதிர்பார்ப்பும், இக்கருத்தின் அடிப்படையிலேயே மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் கடிதம் கொடுக்க அறக்கட்டளை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in