கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டில், சரித்திர படங்களை இயக்கும் போதெல்லாம், சர்ச்சை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்துார், வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரம். சித்துார் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த, ரஜ புத்திர வம்சத்தைச் சேர்ந்த அரசி, பத்மினியின் கதையை மையமாக வைத்து, பாலிவுட்டில் பத்மாவதி என்ற படம் தயாராகி வருகிறது. இதில், பத்மாவதியாக, தீபிகா படுகோனேவும், அவரது கணவர், ரதன் சிங்காக ஷாகித் கபூரும்,
அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில், உண்மையான சம்பவங்களை திரித்து, ரஜ புத்திர வம்சத்தையும், ராணி பத்மினியையும் அவமதிக்கும்
வகையில் காட்சிகள் உள்ளதாகக் கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இதனால், 'இந்த படத்தை
சிக்கல் இல்லாமல் வெளியிட முடியுமா...' என, கவலையில்
ஆழ்ந்துள்ளார், இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி.