பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அவள் பெயர் தமிழரசி படத்தை தொடர்ந்து எழுத்தாளர் மீரா கதிரவன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் விழித்திரு. கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். விழித்திரு படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். படத்தில் தன்ஷிகா, டி.ராஜேந்தரின் ரசிகையாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் டி.ராஜேந்தரும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தன்ஷிகா பேசும் போது டி.ராஜேந்தரின் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.
இதையடுத்து பேச வந்த டி.ராஜேந்தர், எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் சபை நாகரிகம் தெரிந்திருக்க வேண்டும் என்று தன்னுடைய பாணியில் அடுக்கு மொழியில் பேச, இதை சற்றும் எதிர்பார்க்காத தன்ஷிகா, மேடையில் அமர்ந்திருந்த போது கண் கலங்க தொடங்கிவிட்டார். இது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
விழித்திரு படம் அக்., 6-ம் தேதி ரிலீஸாக உள்ளது.