'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மம்முட்டி, துல்கர் சல்மான் குறித்து ஜாலியாக விமர்சனம் செய்த மலையாள நடிகை ரேஷ்மா ராஜன். கடந்த இரண்டு நாட்களாக இருதரப்பு ரசிகர்களின் கண்டனத்திற்கும் ஆளாகி வருகிறார். கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் வெளியானது. லிஜோஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் படம் முழுக்க ஹீரோ, ஹீரோயின் உட்பட 85 கதாபாத்திரங்களில் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருந்தனர். அதில் கதாநாயகிகளில் ஒருவராக லிச்சி என்கிற கேரக்டரில் நடித்த அன்னா ரேஷ்மா ராஜன் தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தார்.
அந்தப்படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது, கடந்த ஒருமாதமாக சோஷியல் மீடியாவில் பிரபலமான ஜிமிக்கி கம்மல்' பாடல் இடம்பெற்ற 'வெளிப்பாடிண்டே புத்தகம்' படத்தில் மோகன்லாலின் கதாநாயகியாக நடித்து இன்னும் பிரபலமானார் ரேஷ்மா ராஜன். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ரேஷ்மாவிடம், மம்முட்டி, துல்கர் சல்மான் யார் படத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பம் என அவரிடம் கேட்கப்பட்டது..
இருவர் படத்திலும் நடிக்க விருப்பம் என அவர் பொதுவாக பதிலளித்திருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. அவரோ, மம்முட்டி, துல்கர் இருவரும் ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்றும்., அந்தப்படத்தில் துல்கரின் ஜோடியாக நடிப்பதாகவும், அதேசமயம் மம்முட்டியின் மகனாக துல்கர் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஒருவேளை மம்முட்டி ஹீரோவாக நடித்தால் அவருக்கு ஜோடியாக தான் நடிப்பதாகவும் துல்கர் மம்முட்டியின் தந்தையாகவும் நடிக்க வேண்டும் என விளையாட்டாக கூறினாராம்.. (விளையாட்டாக கூறியது போலவா தெரிகிறது..?)
விடுவார்களா இருதரப்பு ரசிகர்களும்.. சோஷியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக ரேஷ்மாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். இதனால் அரண்டுபோன ரேஷ்மா, தான் விளையாட்டகத்தான் அப்படி கூறினேன் என்றும், சிலர் அதை தவறாக புரிந்து கொண்டார்கள் என்றும் கண்ணீருடன் ஒரு வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் மம்முட்டியும் ரேஷ்மாவை போனில் தொடர்பு கொண்டு, ரேஷ்மா சொன்னது குறித்து தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அதனால் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறிய பின்பே ஓரளவு ரிலாக்ஸ் ஆனாராம் ரேஷ்மா ராஜன். இருந்தாலும் ரசிகர்களின் அர்ச்சனைகள் இப்போதும் நின்றபாடில்லை.