கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானவர் தான்யா. இவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். ராதாமோகனின் பிருந்தாவனம் படத்தில் நடித்த தான்யா, தற்போது விஜயசேதுபதியுடன் கருப்பன் படத்தில் அவரது மனைவியாக அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி தான்யா கூறுகையில், பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம் படங்களைத் தொடர்ந்து இந்த கருப்பன் படத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்துள்ளேன். இதற்கு முந்தைய படங்களில் செய்த சின்னச்சின்ன தவறுகள்கூட இல்லாமல் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளேன். அதற்கு காரணம், இயக்குனர் பன்னீர் செல்வமும், நாயகன் விஜய் சேதுபதியும் தான். எந்த காட்சிகளில் எந்தமாதிரி நடிக்க வேண்டும் என்று எனக்கு சரியான பயிற்சி கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாகத்தான் இந்த படத்தில் என்னால் நன்றாக நடிக்க முடிந்தது என்று நினைக்கிறேன். அதோடு, சினிமாவில் நீண்டதூரம் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் இந்த கருப்பன் படம் எனக்கு கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் இல்லை என்கிற ஆதங்கம் அனைவருக்குமே உள்ளது. அதனால் எனக்கு நல்ல ஆதரவு செய்கிறார்கள். அது சந்தோசமாக உள்ளது. இதேபோல் தொடர்ந்து நம்முடைய டைரக்டர்கள் எனக்கு நல்ல படவாய்ப்புகளை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, கருப்பன் படத்திற்கு பிறகு தான்யா எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிப்பார் என்கிற நம்பிக்கை டைரக்டர்களுக்கு ஏற்படும். அதனால், இந்த படம் வெளியான பிறகு அடுத்தடுத்து புதிய படங்கள் எனக்கு புக்காகும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் தான்யா.