இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல காமெடி நடிகரும், சின்னத்திரை தொகுப்பாளருமான தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், தினமும் குடித்து விட்டு வந்து அடிப்பதாகவும் நித்யா போலீசில் புகார் செய்திருந்தார். இதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அவலுகத்தில் ஒரு புகார் மனு அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது...
நானும், நித்யாவும் காதலித்து திருமணம் செய்தோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை நன்றாக போனது. ஆனால் சில காலமாக என் மனைவிக்கும், மின்வாரியத்தில் பணிபுரியும் பைசல் என்பவருக்கும் தவறான உறவு இருப்பதை கண்டுபிடித்தேன். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண எனது நண்பரும் காவல்துறையின் ஆவண காப்பகத்தில் பணிபுரிபவருமான மனோஜ்குமாரிடம் சொன்னேன்.
ஆனால் தற்போது மனோஜ்குமார், பைசலுடன் சேர்ந்து கொண்டு என் மனைவியை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார். உன் மனைவி விஷயத்தில் தலையிடாதே அவளை விட்டுவிடு என்கிறார். மீறினால் உன் மனைவியும், பைசலும் நெருக்கமாக இருக்கும் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு உன் இமேஜை கெடுத்து விடுவேன் என்கிறார். அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தாடி பாலாஜி குறிப்பிட்டிருக்கிறார்.