மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சினிமாவுக்கு மொழி பாகுபாடு இல்லை என்பது போல ஹீரோக்களை ஆராதிப்பதும் தங்களது அபிமான ஹீரோக்களுக்காக மற்ற நடிகர்களை வசைபாடுவதும், சோஷியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்களுடன் மல்லுக்கு நிற்பதும் கூட அனைத்து திரையுலகங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக மலையாள சினிமாவில் சமீபகாலமாக இந்தப்போக்கு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சினிமா ரசிகர்களிடம் பொதுவாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார் துல்கர் சல்மான்.
“விஜய்யும், அஜித்தும் நேரிலோ அல்லது அறிக்கை மூலமாகவோ சண்டை போட்டுக்கொண்டது உண்டா..? இல்லையே அவர்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருவர் வீட்டு விசேஷங்களுக்கு இன்னொருவர் செல்கிறார்கள். பொது இடங்களில் சந்தித்துக்கொண்டால் மனம் விட்டு பேசுகிறார்கள். எனக்கு தெரிந்து எந்த நடிகர்களுக்கும் மற்ற நடிகர்களுடன் நேரிடையாக பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை.
ரசிகர்கள் ஆதரவு என்பது கிரிக்கெட்டிற்கு அளிக்கும் ஆதரவு போலத்தான். எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பிடிக்கும் என்றால் இன்னொருவருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பிடிக்கும்.. ஆகவே நடிகர்களை ஆராதிப்பதிலும் இதே விளையாட்டு மனப்பான்மையுடன் இருப்பதே நல்லது” என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் துல்கர் சல்மான்.